பாலின சமத்துவம் இந்தியச் சூழலில் பெரும்பாலான வர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத கருத்தியலாக உள்ளது. குடும்ப வன்முறை, அரசு வன்முறை மதவெறி வன்முறை, பாலியல் வன்முறை, வல்லுறவு என பல வகையான வன்முறை வெறியாட்டங்களை பெண்கள் சந்தித்து கொண்டுள்ளனர்.
நியாயப்படுத்தப்படும் வன்முறை
வன்முறை என்பதே சமத்துவம் இன்மையின் முக்கியமான வெளிப்பாடு தான். ஆனால் பண்பாட்டு ரீதியான காரணங்களால் பெண்கள் மீதான வன்முறை பெரும்பாலும் நியாயப்படுத்தப்படுகிறது அல்லது அதற்கு காரணமே பெண்தான், பெண்ணினுடைய நடவடிக்கை தான், பெண்ணினுடைய உடை தான் என பெண்ணே பலிகடாவாக ஆக்கப்படுகிறார். இத்தகைய மூச்சடைக்கும் குடும்பச் சூழலில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் பல்வேறு காரணங் களால் தயங்கி நிற்கின்றனர்.
குடும்பம் என்பது அதில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் மதிப்பதாக இருக்க வேண்டும். அனு சரிப்பு என்று வந்தால் அனைவரும் அனுசரிக்க வேண்டும். பெண்ணு ரிமை பேசுபவர்களால் தான் குடும்பம் உடைபடுகிறது என்பதெல்லாம் பத்தாம் பசலித்தனமான ஆணாதிக்க ஆர் எஸ் எஸ் பாஜக சொல்லுகிற கருத்து.
அதில் நமக்கு ஏற்பில்லை. மனு ஸ்மிருதி கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த தீவிர வேகத்தில் செயல்படும் ஆர் எஸ் எஸ்ஸின் அரசியல் நிகழ்ச்சி நிரல், பெண்கள் முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டியதாகும். முள்ளில் சேலை விழுந்தாலும் சேலையில் முள் விழுந்தாலும் என நீட்டி முழக்கி, எது நடந்தாலும் பெண் அனுசரிக்க வேண்டும் என்று முடிகிற வியாக்கியானங்கள் நொறுக்கப்பட வேண்டும்.
பெண்ணுரிமையை இந்த சமூகம் கெட்ட வார்த்தை பட்டியலில் தான் வைத்திருக்கிறது. அந்த வார்த்தைக்கும் கருத்தியலுக்கும் முதலில் உரிய இடம் வேண்டும்.
கருணை அல்ல! “கைகள் உயரட்டும், தலைகள் நிமிரட்டும், வானத்தின் ஒரு பாதி அங்கே அமரட்டும்” என்ற கவிதை வரிகள் நிதர்சனமாக வேண்டும். இப்பிரச்சனையை கருணை என்ற அடிப்படையில் அணுகினால் போதாது, மனமாற்றம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாலும் நிற்காது. கட்டமைப்பு ரீதியாக பார்ப்பதே சரியானது.
பெண் மீதான ஒடுக்குமுறை மூன்று மட்டங்களில் நிலவுகிறது -
பெண் என்பதால், உழைப்பாளி என்பதால், குடிமகள் என்பதால் – என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் வரையறுக்கிறது; மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரட்டும் போது சாதிய பாலின பாகுபாடுகள் நிலவுவது பெரும் தடைக்கல்லாக உள்ளது என விளக்குகிறது. இவற்றை எதிர்த்த போராட்டம் வர்க்கப் புரட்சிக்கு வலு சேர்க்கும் என முன் வைக்கிறது.
ஆண் மேலாதிக்க சமூக அமைப்பு இந்திய சமூக அமைப்பும் குடும்பமும் ஆண் மேலாதிக்கக் கட்டமைப்பு உடையதாக இருப்பதால் பெண்ணுக்குத்தாழ்ந்த சமூக அந்தஸ்தே நிலவுகிறது. நியாயப்படுத்தவும் படுகிறது.
பெண்ணடிமைத்தனம் என்பது வர்க்க சமூகம் உருவானதோடு ஒத்திசைந்து தோன்றியது என்கிறார் மாமேதை ஏங்கல்ஸ். நிலப்பிரபுத்துவம் பெண்ணடிமைத்தனத்தை நிறுவனமய மாக்கியது, அதற்கு ஒரு தத்துவ தளத்தைக் கட்டமைத்தது. முதலாளித் துவம் தனது லாபநோக்கில் உழைப்புச் சுரண்டலுக்கு ஏதுவாக இந்த பாகுபாட்டைப் பயன்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பெண்ணின் உழைப்புக்கு முக்கியத்துவமோ, சம மதிப்போ இல்லை. கடந்த காலத்தில் பீடித் தொழிலில் குறைவான கூலியாக இது பிரதிபலித்தது. விவசாயத்திலும் ஆண் கூலிக்கும் பெண் கூலிக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்தது. பின்னர் சட்டக் கூலி நிர்ணயிக்கப் பட்ட போது, பெண் செய்யும் நடவு, களை எடுப்பது உள்ளிட்ட விவசாய வேலைகளுக்கு, ஆண் வேலைக்கான ஊதியத்தை விட குறைவாகவே தீர்மானிக்கப்பட்டது.
ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் தான் சம கூலி உண்டு, அதுவும் இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தாலேயே கொண்டு வரப்பட்டது. ஆணாதிக்க சமூக அமைப்பின் ஓர் அலகு தான் குடும்பம். எனவே சமத்துவமின்மை குடும்பத்துக்குள் பட்டவர்த்தனமாக பிரதிபலிக்கிறது. சலிப்பூட்டும் வீட்டு வேலைகள் என தோழர் லெனினால்வர்ணிக்கப்பட்ட அத்தனையும் பெண்ணின் மீதே சுமத்தப்பட்டுள்ளது.
குடும்பம் புனிதமானது, கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்கிற நிலப்பிரபுத்துவ கருத்தியலை முதலாளித்துவமும், தம் சொந்த நிகழ்ச்சி நிரலுக்காக வழிமொழிகிறது. கணக்கில் வராத வீடு சார் உழைப்பு ஐநா சபை பல பத்தாண்டுகளாக, வீடு சார் உழைப்பைக் கணக்கில் வராத உழைப்பு என்றும், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்தது என்றும், இது மொத்த உள்நாட்டு உற்பத்திக் (ஜிடிபி) கணக்கில் எடுத்துகொள்ளப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டது.
இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரத்தில் 1972ல் நடந்த மூன்றாவது தேசிய பெண் விடுதலை மாநாட்டில், வீடுசார் உழைப்புக்கு ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கை செல்மா ஜேம்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட ‘வீடுசார் உழைப்புக்கு ஊதியம் கோரும் பிரச்சார மேடை’ சார்பில் முன்வைக்கப்பட்டது.
இந்த முன்முயற்சியில் மார்க்சிய பின்புலமுள்ள பெண்ணியவாதிகளும் இருந்தனர். பெண்களின் இலவச உழைப்பு முதலாளித்துவத்துக்குப் பயன்படுகிறது என சுட்டிக்காட்டி, வீட்டில் பெண்கள் செய்யும் வேலை சமுதாயத்தின் அடிப்படையான பணி என்ற அங்கீகாரம் வேண்டும் என்பதுடன் இணைத்து, இந்த ‘இலவச உழைப்புக்கு’ அரசு ஊதியம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
ஆகஸ்ட் பெபெல் சொன்னது... பெண்கள் வீட்டில் செய்யும் வேலைக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தாக்கம் ஜெர்மானிய சோஷலிஸ்டும், ஜெர்மானிய சமூக ஜனநாயக கட்சியை நிறுவியவர்களில் ஒருவருமான ஆகஸ்ட் பெபெல் அவர்களால் 1879ல் அவர் எழுதிய ‘பெண்களும் சோஷலிசமும்’ என்ற நூலில் எழுப்பப்பட்டது. “அரசாங்கமே ஆங்காங்கே மையப்படுத்தப் பட்ட மலிவு விலை உணவகங்கள், சலவை யகங்களை நடத்தினால், பெண்கள் பெருமளவு இதிலிருந்து விடு தலையாக முடியும்,
இது பெண்களின் தனிப்பட்ட வேலை என்பது மாற வேண்டும்” என அந்நூலில் வாதிடுகிறார். அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் பெண்களை மீண்டும்அடுப்படிக்குத் தள்ளி விடுவதாக இருக்கக் கூடாது, பெண்கள் அந்தக் குறுகிய வெளியிலிருந்து வெளியேறி முழுமையான பொது வெளிக்கு வருவதற்கு உதவ வேண்டும் என்பதே அவரது வாதத்தின் சாராம்சம்.
1898ல் சார்லட் பெர்க்கின்ஸ் என்ற சோஷலிச பெண்ணியவாதி, பெண்களின் குடும்ப வேலை, உற்பத்திசார் உழைப்பிலிருந்து அவர் களைப் பிரித்து, வீடு என்ற எல்லைக்குள்ளேயே நிறுத்தி விடுவதால், அவர்கள் மீதான ஒடுக்குமுறைக்குக் காரணமாக அமைகிறது, எனவே அந்த உழைப்பு மதிப்பு மிக்கதாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார். எழுதியது மட்டுமல்ல,
நடத்திக் காட்டியதும் கம்யூனிஸ்டுகளே! புரட்சிக்குப் பின், சோவியத் யூனியனில் இந்தப் பிரச்சனை முன்னுக்கு வந்தது. பெண்களின் தோள்களிலிருந்து வீட்டு வேலைகள் அகற்றப்பட வேண்டும் என்பதை மிக அழுத்தமாகப் பேசியவர்களில் இனேசா அர்மண்ட் மற்றும் அலெக்சாண்ட்ரா கொலந்தாய் முக்கியமான வர்கள். இவர்களின் முயற்சியால் 1917-18ல் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் (போல்ஷ்விக் கட்சி) பெண்களுக்கான தனித்துறை உருவாக்கப்பட்டது.
உற்பத்தியில் ஈடுபடுவோரின் உழைப்புக்கு, அதாவது வருமானம் ஈட்டுவோரின் உழைப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ, அதே முக்கியத்துவம் ஊதியமில்லா வீடு சார் உழைப்புக்கும் கிடைத்திட வேண்டும் என கொலந்தாய் வாதிட்டார். எனவே இவற்றை சமூகமயமாக்கி, வீட்டுக்கு வெளியே கூட்டு உழைப்பின் மூலம் இதனைச் செய்ய வைத்து, அத்தகைய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது எனக் கொண்டு வந்தனர்.
அதாவது, இப்பணிகள் அவரவர் வீட்டில் பெண் செய்ய வேண்டிய தனிப்பட்ட கடமைகள் என்பதிலிருந்து மாறி பொது வெளிக்குக் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் சலிப்பூட்டும் இலவச கட்டாய உழைப்பிலிருந்து விடுபட்டு, ஆணுக்கு இணையாகப் பெண்களும் சமூக உற்பத்தியிலும், பொதுப் பணிகளிலும் ஈடுபட முடியும் என்பது நிறுவப்பட்டது.
ஆனால் இந்நிலை சுலபமாக வந்து விடவில்லை. 1922-24 கால கட்டத்தில் சோவியத் ஒன்றியத்தின் நகர்ப்புறம், கிராமப்புறம், மத்திய தர மற்றும் தொழிலாளர் குடும்ப உறுப்பினர்கள் ஆய்வு செய்யப்பட்ட னர். மலிவு விலை உணவகம், குழந்தைக் காப்பகம் போன்ற ஏற்பாடு களை அரசு செய்தால், பெண்களுக்கு 60 சதவீத நேரம் மிச்சமாகும்.
பாலின சமத்துவம் இந்தியச் சூழலில் பெரும்பாலான வர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத கருத்தியலாக உள்ளது. குடும்ப வன்முறை, அரசு வன்முறை மதவெறி வன்முறை, பாலியல் வன்முறை, வல்லுறவு என பல வகையான வன்முறை வெறியாட்டங்களை பெண்கள் சந்தித்து கொண்டுள்ளனர். நியாயப்படுத்தப்படும் வன்முறை வன்முறை என்பதே சமத்துவம் இன்மையின் முக்கியமான வெளிப்பாடு தான். ஆனால் பண்பாட்டு ரீதியான காரணங்களால் பெண்கள் மீதான வன்முறை பெரும்பாலும் நியாயப்படுத்தப்படுகிறது அல்லது அதற்கு காரணமே பெண்தான், பெண்ணினுடைய நடவடிக்கை தான், பெண்ணினுடைய உடை தான் என பெண்ணே பலிகடாவாக ஆக்கப்படுகிறார்.
இத்தகைய மூச்சடைக்கும் குடும்பச் சூழலில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் பல்வேறு காரணங் களால் தயங்கி நிற்கின்றனர். குடும்பம் என்பது அதில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் மதிப்பதாக இருக்க வேண்டும். அனு சரிப்பு என்று வந்தால் அனைவரும் அனுசரிக்க வேண்டும். பெண்ணு ரிமை பேசுபவர்களால் தான் குடும்பம் உடைபடுகிறது என்பதெல்லாம் பத்தாம் பசலித்தனமான ஆணாதிக்க ஆர் எஸ் எஸ் பாஜக சொல்லுகிற கருத்து. அதில் நமக்கு ஏற்பில்லை. மனு ஸ்மிருதி கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த தீவிர வேகத்தில் செயல்படும் ஆர் எஸ் எஸ்ஸின் அரசியல் நிகழ்ச்சி நிரல், பெண்கள் முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டியதாகும்.
முள்ளில் சேலை விழுந்தாலும் சேலையில் முள் விழுந்தாலும் என நீட்டி முழக்கி, எது நடந்தாலும் பெண் அனுசரிக்க வேண்டும் என்று முடிகிற வியாக்கியானங்கள் நொறுக்கப்பட வேண்டும். பெண்ணுரிமையை இந்த சமூகம் கெட்ட வார்த்தை பட்டியலில் தான் வைத்திருக்கிறது. அந்த வார்த்தைக்கும் கருத்தியலுக்கும் முதலில் உரிய இடம் வேண்டும். கருணை அல்ல! “கைகள் உயரட்டும், தலைகள் நிமிரட்டும், வானத்தின் ஒரு பாதி அங்கே அமரட்டும்” என்ற கவிதை வரிகள் நிதர்சனமாக வேண்டும். இப்பிரச்சனையை கருணை என்ற அடிப்படையில் அணுகினால் போதாது, மனமாற்றம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாலும் நிற்காது. கட்டமைப்பு ரீதியாக பார்ப்பதே சரியானது.
பெண் மீதான ஒடுக்குமுறை மூன்று மட்டங்களில் நிலவுகிறது - பெண் என்பதால், உழைப்பாளி என்பதால், குடிமகள் என்பதால் – என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் வரையறுக்கிறது; மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரட்டும் போது சாதிய பாலின பாகுபாடுகள் நிலவுவது பெரும் தடைக்கல்லாக உள்ளது என விளக்குகிறது. இவற்றை எதிர்த்த போராட்டம் வர்க்கப் புரட்சிக்கு வலு சேர்க்கும் என முன் வைக்கிறது. ஆண் மேலாதிக்க சமூக அமைப்பு இந்திய சமூக அமைப்பும் குடும்பமும் ஆண் மேலாதிக்கக் கட்டமைப்பு உடையதாக இருப்பதால் பெண்ணுக்குத்தாழ்ந்த சமூக அந்தஸ்தே நிலவுகிறது.
நியாயப்படுத்தவும் படுகிறது. இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல… பெண்ணடிமைத்தனம் என்பது வர்க்க சமூகம் உருவானதோடு ஒத்திசைந்து தோன்றியது என்கிறார் மாமேதை ஏங்கல்ஸ். நிலப்பிரபுத்துவம் பெண்ணடிமைத்தனத்தை நிறுவனமய மாக்கியது, அதற்கு ஒரு தத்துவ தளத்தைக் கட்டமைத்தது. முதலாளித் துவம் தனது லாபநோக்கில் உழைப்புச் சுரண்டலுக்கு ஏதுவாக இந்த பாகுபாட்டைப் பயன்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பெண்ணின் உழைப்புக்கு முக்கியத்துவமோ, சம மதிப்போ இல்லை. கடந்த காலத்தில் பீடித் தொழிலில் குறைவான கூலியாக இது பிரதிபலித்தது. விவசாயத்திலும் ஆண் கூலிக்கும் பெண் கூலிக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்தது.
பின்னர் சட்டக் கூலி நிர்ணயிக்கப் பட்ட போது, பெண் செய்யும் நடவு, களை எடுப்பது உள்ளிட்ட விவசாய வேலைகளுக்கு, ஆண் வேலைக்கான ஊதியத்தை விட குறைவாகவே தீர்மானிக்கப்பட்டது. ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் தான் சம கூலி உண்டு, அதுவும் இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தாலேயே கொண்டு வரப்பட்டது. ஆணாதிக்க சமூக அமைப்பின் ஓர் அலகு தான் குடும்பம். எனவே சமத்துவமின்மை குடும்பத்துக்குள் பட்டவர்த்தனமாக பிரதிபலிக்கிறது. சலிப்பூட்டும் வீட்டு வேலைகள் என தோழர் லெனினால்வர்ணிக்கப்பட்ட அத்தனையும் பெண்ணின் மீதே சுமத்தப்பட்டுள்ளது.
குடும்பம் புனிதமானது, கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்கிற நிலப்பிரபுத்துவ கருத்தியலை முதலாளித்துவமும், தம் சொந்த நிகழ்ச்சி நிரலுக்காக வழிமொழிகிறது. கணக்கில் வராத வீடு சார் உழைப்பு ஐநா சபை பல பத்தாண்டுகளாக, வீடு சார் உழைப்பைக் கணக்கில் வராத உழைப்பு என்றும், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்தது என்றும், இது மொத்த உள்நாட்டு உற்பத்திக் (ஜிடிபி) கணக்கில் எடுத்துகொள்ளப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டது.
இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரத்தில் 1972ல் நடந்த மூன்றாவது தேசிய பெண் விடுதலை மாநாட்டில், வீடுசார் உழைப்புக்கு ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கை செல்மா ஜேம்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட ‘வீடுசார் உழைப்புக்கு ஊதியம் கோரும் பிரச்சார மேடை’ சார்பில் முன்வைக்கப்பட்டது. இந்த முன்முயற்சியில் மார்க்சிய பின்புலமுள்ள பெண்ணியவாதிகளும் இருந்தனர். பெண்களின் இலவச உழைப்பு முதலாளித்துவத்துக்குப் பயன்படுகிறது என சுட்டிக்காட்டி, வீட்டில் பெண்கள் செய்யும் வேலை சமுதாயத்தின் அடிப்படையான பணி என்ற அங்கீகாரம் வேண்டும் என்பதுடன் இணைத்து, இந்த ‘இலவச உழைப்புக்கு’ அரசு ஊதியம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஆகஸ்ட் பெபெல் சொன்னது... பெண்கள் வீட்டில் செய்யும் வேலைக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தாக்கம் ஜெர்மானிய சோஷலிஸ்டும், ஜெர்மானிய சமூக ஜனநாயக கட்சியை நிறுவியவர்களில் ஒருவருமான ஆகஸ்ட் பெபெல் அவர்களால் 1879ல் அவர் எழுதிய ‘பெண்களும் சோஷலிசமும்’ என்ற நூலில் எழுப்பப்பட்டது. “அரசாங்கமே ஆங்காங்கே மையப்படுத்தப் பட்ட மலிவு விலை உணவகங்கள், சலவை யகங்களை நடத்தினால், பெண்கள் பெருமளவு இதிலிருந்து விடு தலையாக முடியும், இது பெண்களின் தனிப்பட்ட வேலை என்பது மாற வேண்டும்” என அந்நூலில் வாதிடுகிறார். அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் பெண்களை மீண்டும்அடுப்படிக்குத் தள்ளி விடுவதாக இருக்கக் கூடாது, பெண்கள் அந்தக் குறுகிய வெளியிலிருந்து வெளியேறி முழுமையான பொது வெளிக்கு வருவதற்கு உதவ வேண்டும் என்பதே அவரது வாதத்தின் சாராம்சம். 1898ல் சார்லட் பெர்க்கின்ஸ் என்ற சோஷலிச பெண்ணியவாதி, பெண்களின் குடும்ப வேலை, உற்பத்திசார் உழைப்பிலிருந்து அவர் களைப் பிரித்து, வீடு என்ற எல்லைக்குள்ளேயே நிறுத்தி விடுவதால், அவர்கள் மீதான ஒடுக்குமுறைக்குக் காரணமாக அமைகிறது, எனவே அந்த உழைப்பு மதிப்பு மிக்கதாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார். எழுதியது மட்டுமல்ல, நடத்திக் காட்டியதும் கம்யூனிஸ்டுகளே! புரட்சிக்குப் பின், சோவியத் யூனியனில் இந்தப் பிரச்சனை முன்னுக்கு வந்தது. பெண்களின் தோள்களிலிருந்து வீட்டு வேலைகள் அகற்றப்பட வேண்டும் என்பதை மிக அழுத்தமாகப் பேசியவர்களில் இனேசா அர்மண்ட் மற்றும் அலெக்சாண்ட்ரா கொலந்தாய் முக்கியமான வர்கள். இவர்களின் முயற்சியால் 1917-18ல் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் (போல்ஷ்விக் கட்சி) பெண்களுக்கான தனித்துறை உருவாக்கப்பட்டது. உற்பத்தியில் ஈடுபடுவோரின் உழைப்புக்கு, அதாவது வருமானம் ஈட்டுவோரின் உழைப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ, அதே முக்கியத்துவம் ஊதியமில்லா வீடு சார் உழைப்புக்கும் கிடைத்திட வேண்டும் என கொலந்தாய் வாதிட்டார். எனவே இவற்றை சமூகமயமாக்கி, வீட்டுக்கு வெளியே கூட்டு உழைப்பின் மூலம் இதனைச் செய்ய வைத்து, அத்தகைய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது எனக் கொண்டு வந்தனர்.
அதாவது, இப்பணிகள் அவரவர் வீட்டில் பெண் செய்ய வேண்டிய தனிப்பட்ட கடமைகள் என்பதிலிருந்து மாறி பொது வெளிக்குக் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் சலிப்பூட்டும் இலவச கட்டாய உழைப்பிலிருந்து விடுபட்டு, ஆணுக்கு இணையாகப் பெண்களும் சமூக உற்பத்தியிலும், பொதுப் பணிகளிலும் ஈடுபட முடியும் என்பது நிறுவப்பட்டது. ஆனால் இந்நிலை சுலபமாக வந்து விடவில்லை. 1922-24 கால கட்டத்தில் சோவியத் ஒன்றியத்தின் நகர்ப்புறம், கிராமப்புறம், மத்திய தர மற்றும் தொழிலாளர் குடும்ப உறுப்பினர்கள் ஆய்வு செய்யப்பட்ட னர்.
மலிவு விலை உணவகம், குழந்தைக் காப்பகம் போன்ற ஏற்பாடு களை அரசு செய்தால், பெண்களுக்கு 60 சதவீத நேரம் மிச்சமாகும் என்று சுட்டிக் காட்டப்பட்டது.செய்தித்தாள் வாசிப்பது, அரசியல் பணிகளில் ஈடுபடுவது, கிளப்புக்குப் போவது, கலாச்சார நடவடிக்கைகளுக்கு செல்வது, ஓய்வான நேரம் கிடைப்பது போன்றவற்றில் ஆண்கள் தான் முன்னணியில் உள்ளனர்.
எனவே பெண்களுக்கு இந்த அளவு நேரம் கிடைத்தால்தான் சமூகப் பணியிலும், தம்மை மேம்படுத்திக் கொள்ளும் பணியிலும் ஈடுபட முடியும் என ஆய்வின் முடிவுகள் விளக்கின. இதன் தொடர்ச்சியாகவே தோழர் லெனின் வழிகாட்டுத லில், மலிவு விலை உணவகம், மலிவு விலை சலவை யகம், குழந்தைக் காப்பகம் போன்றவை சட்டப்பூர்வ மாக்கப்பட்டன. இதற்குப்பின், பெண்கள் இதுவரை எண்ணிப் பார்க்காத அனைத்துப் பணிகளிலும் ஈடுபட ஆரம்பித்தனர். வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளை விட, சோவியத் பெண்கள் பல்வேறு துறை களில் முத்திரை பதித்தனர்.
1970களில் மார்கரெட் பென்ஸ்டன், பெக்கி மார்ட்டன் போன்ற மார்க்சிய பெண்ணியவாதிகள், பெண்ணின் குடும்ப உழைப்பு மதிப்பு மிக்கது என்பதை மார்க்சிய ஆய்வுக் கண்ணோட்டத்தில் முன்வைத்தனர். ‘பொங்கிப் போடுறத விட்டுட்டு...’ இந்த அனுபவங்களையெல்லாம் கணக்கில் எடுத்தே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தன் நிலைபாட்டை உருவாக்கியது. ஊதியம் கேட்பது என்ற கோரிக்கையை எழுப்பாமல், பெண்களின் வீடு சார் உழைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும்; அளவீடு செய்யப்பட வேண்டும்;
சமூகமும், திட்டம் தீட்டுபவர்க ளும் இதன் மதிப்பை உணர வேண்டும் என்று முன்னெடுத்தது. இதை ஒட்டியே, கருத்தியல் தளத்தில், ‘என் மனைவி சும்மா இருக்கிறாள்’ என்று பேசுவதைக் கடுமையாகச் சாடியது, பல கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியது. 1980களில் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தை காவல்துறை தடியடி நடத்தி கலைத்தது.
பெண்களை அடிக்கும் போதெல்லாம், “புருஷனுக்கு பொங்கி போடறத விட்டுட்டு இந்த கையில கொடியா புடிக்கிற, இந்த வாயில கோஷமா போடுற” என்ற கேள்விக்கணை களையும் தொடுத்தது. இணையதளத்தில் வலுவாக கருத்துக்களை பதிவிடும் பெண்களை அவதூறு செய்யும் பின்னூட்டங்களில் இப்போதும், “புரு ஷனுக்கு சோறாக்கி போடறத விட்டுட்டு, பேரப் புள்ளைய கவனிக்கிறத விட்டுட்டு இதெல்லாம் உனக்கு தேவையா” என்கிற ரீதியில் கருத்துக்களை பார்க்க முடியும். பெண் உழைப்பின் மதிப்பு என்ன? இன்று பல்வேறு தனி நபர்கள், அமைப்புகள் வீடு சார் உழைப்புக்கான நேரம், தன்மை எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதைப் பிரச்சாரம் செய்கின்ற னர்.
உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் போன்றவர்கள், தம் தீர்ப்புகளிலும் பெண்ணின் குடும்ப உழைப்பை, வருமானம் சார்ந்த பணிக்கு ஈடாக அங்கீகரித்தனர். 2005ல் நிறைவேற்றப்பட்ட ‘பெண்கள் பிரச்சனை கள் குறித்த மார்க்சியப் பார்வை’ என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு ஆவணம், “ஒரு தொழிலாளியின் ஊதியம் அவர் உழைப்பின் மதிப் புக்கு சமமானதல்ல,
அடுத்த நாள் உழைப்பு சக்தியை மீண்டும் செலவிடுவதற்கான பராமரிப்புக்குத் தேவை யான பொருட்களின் மதிப்பை ஒட்டியதாகத் தான் இருக்கும்” என மார்க்ஸ் கூறியதை மேற்கோள் காட்டு கிறது. “பெண்ணின் வீடுசார் இலவச உழைப்பு, சந்தையில் விற்கும் சரக்கை உற்பத்தி செய்யாது; உபரி மதிப்புக்கு நேரடியாக பங்களிப்பு செய்யாது; ஆனால், தொழிலாளியின் பராமரிப்பு செலவைக் குறைக்கிறது, இது முதலாளித்துவ சுரண்டலுக்கு ஏதுவான சூழலைத் தீவிரப்படுத்துகிறது” என சுட்டிக்காட்டுகிறது.
விடுதலை எப்போது? நவீன தாராளமய கொள்கைகள் இந்நிலையை மேலும் ஊதி விடுகின்றன. சேவை நல நடவடிக்கை களிலிருந்து அரசு தம்மை விலக்கிக் கொள்ளும் நிலைமை, அவற்றைத் தனியார்மயப்படுத்தும் ஏற்பாடு போன்றவை பெண்ணின் பாரத்தை மேலும் கூடுதலாக்குகிறது. பெண்ணின் மீதான ஒடுக்கு முறைக்கு ஆணாதிக்கம் மட்டுமல்ல, அதற்கு அடிப்படையான நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் போன்ற காரணிகள் உள்ளன என்பதை மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் சரியாகவே முன்வைக்கிறது.
இதற்கான தீர்வு, தனியுடமை ஒழிப்போடு இணைந்தது என்பதையும் விளக்குகிறது. சோஷலிச சமூகமே பெண் விடுதலைக்குத் தேவையான பவுதீக சூழலை உருவாக்க முடியும். பெண்கள் சந்திக்கும் வர்க்க, பாலின, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போரில், பெண்ணின் வீடு சார் உழைப்பை அங்கீகரிப்பது என்பது ஓர் அம்சம். தனியார்மயம், வணிகமயத்தோடு சமூக நீதியற்ற கல்விக் கொள்கை பெண் கல்விக்கும் வேட்டு வைக்கிறது,
வேலை வாய்ப்பு வெட்டப்பட்டு பெண்க ளின் வேலை வாய்ப்பும் பறிக்கப்படுகிறது, பெண்ணுக்கு எதிரான கருத்தாக்கங்கள் பெருமைப் படுத்தப்படும் சூழல், மறுத்துப்பேசும் வாய்ப்புகள் அடைக்கப்படுதல், அரசின் சேவைசார் நல நட வடிக்கைகள் – சத்துணவு, குடிநீர் விநியோகம் போன்றவை – தனியார்மயப்படுத்தப்படும் முயற்சி, பொதுவிநியோகம் பாதிப்பு… இவை அனைத்துமே பெண்ணின் தாழ்ந்த அந்தஸ்தை தக்க வைக்கின்றன.
வேலைநேரம் குறைந்தால்தான்... 8 மணி நேர வேலை நேரத்தை வலியுறுத்தி, முதலாம் சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் தோழர் மார்க்ஸ் பேசும் போது, வேலை நேரம் குறைந்தால் தான் ஓய்வு, பொழுதுபோக்கு, அரசியல் சமூக செயல் பாட்டுக்குத் தொழிலாளி நேரம் ஒதுக்க முடியும் என்பதைப் பிரதானமாக முன்வைக்கிறார். இதனைத் தற்போதைய பிரச்சனையுடன் பொருத்திப் பார்த்தால், பெண்ணின் வீடு சார் உழைப்பின் பாரத்தைக் குறைப்பது, குடும்ப உறுப்பினர்களும் அரசும் பகிர்வது போன்ற நடவடிக்கைகள்,
பெண்கள் உற்பத்திசார் உழைப்பில் ஈடுபடவும், ஓய்வு, பொழுது போக்கு, அரசியல் சமூக செயல்பாட்டுக்கு நேரம் ஒதுக்கவும் உதவும். வீட்டு வேலையும் அடிப்படை சமூகப்பணி என்ற கருத்து வலுப்படும். 2019 தேசிய புள்ளியியல் அறிக்கையில், ஒரு நாளைக்கு இலவச வீடுசார் உழைப்புக்காக, ஒரு பெண் 299 நிமிடங்கள், அதாவது 5 மணி நேரம் ஒதுக்கு கிறார். ஆண்களோ 97 நிமிடங்கள், அதாவது ஒன்றரை மணி நேரமே ஒதுக்குகிறார்கள்.
இது தவிர, குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் பேண, பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 134 நிமிடங்கள், அதாவது இரண்டே கால் மணி நேரம் ஒதுக்குகிறார்கள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இதுதான் நிலைமை என பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறுகிறது.
2009 மதிப்பீட்டின் படி, உலகம் முழுவதும் பெண்கள் செய்யும் இலவச வீடுசார் உழைப்பின் மதிப்பு வருடத்துக்கு 612 பில்லியன் டாலர் என்பதாகும். குடும்ப அமைதிக்காக பெண்கள் மட்டுமே அனைத் தையும் தியாகம் செய்ய வேண்டும், குடும்பம் என்கிற அமைப்பை விமர்சிக்கக் கூடாது, கேள்விக்கு உள்ளாக்கக் கூடாது என்று பல ஆணாதிக்க வாதிகள் பேசிக் கொண்டிருக்கும் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் மட்டுமே குடும்பத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும் என முன் வைக்கிறது.
குடும்ப வன்முறை ஒழுங்கு நடவடிக்கைக்குரிய குற்றம் என கட்சியின் அமைப்பு விதிகள் கூறுகின்றன. பெண்கள் அனைவரும் வந்து சேர வேண்டிய அரசியல் இடதுசாரி அரசியல் தான் என உரக்கச் சொல்லுகிற மாநாடாக, தக்கலையில் நடைபெற உள்ள பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு நிச்சயம் அமையும்.